உள்நாட்டு

454 ஐபோன்கள்..!
454 ஐபோன்கள்..!

13 கோடி ரூபாய் பெறுமதியான 454 ஐபோன்கள் பறிமுதல்!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 454 ஐபோன்களை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 3 வெளிநாட்டவர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

நிலத்தடி நீர் ஊற்று…!
நிலத்தடி நீர் ஊற்று…!
சர்வமத இஃப்தார் நிகழ்வு..!
சர்வமத இஃப்தார் நிகழ்வு..!
அஸ்வெசும திட்டத் தரவுப் புதுப்பிப்பு..!
அஸ்வெசும திட்டத் தரவுப் புதுப்பிப்பு..!

வெளிநாட்டு

முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!
முன்னாள் இளவரசர் அண்ட்ரூ கைது!

பிரித்தானிய மன்னர் சார்ள்ஸின் சகோதரரான அண்ட்ரூ மவுண்ட் பேட்டன் வின்ட்சர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக அவர் தனது 66-வது பிறந்தநாளைக் கொண்டாடும் அன்றே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் அண்ட்ரூ கொண்டிருந்த நீண்டகாலத் தொடர்புகள் மற்றும் அண்மையில் வெளியான ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ (Epstein Files) இந்த கைதுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.

2010-ல் அண்ட்ரூ வர்த்தகத் தூதராக இருந்தபோது, பிரித்தானிய அரசாங்கத்தின் மிக ரகசியமான வர்த்தகத் தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


நோர்போக்கில் உள்ள அவரது இல்லம் மற்றும் ‘சாண்ட்ரிங்ஹாம்’ எஸ்டேட்டில் பொலிஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அவரது ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ பட்டங்கள் பறிக்கப்பட்டதால், அவர் தற்போது ஒரு சாதாரண குடிமகனாகவே சட்டத்தை எதிர்கொள்கிறார்.

சட்டம் தனது கடமையைச் செய்யும்” என மன்னர் சார்ள்ஸ் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
1.8 பில்லியன் டொலர் ஜாக்பாட் ..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
மெஸ்ஸிக்கு அமோக வரவேற்பு..!
19 பேர் உயிரிழப்பு..!
19 பேர் உயிரிழப்பு..!

அண்மைச் செய்திகள்

454 ஐபோன்கள்..!

13 கோடி ரூபாய் பெறுமதியான 454 ஐபோன்கள் பறிமுதல்! கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 454 ஐபோன்களை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஐபோன்களின் சந்தைப் பெறுமதி சுமார் 13 கோடி ரூபாய்…

நிலத்தடி நீர் ஊற்று…!

இலங்கை நிலத்தடி நீர் வரலாற்றில் புதிய மைல்கல்லாக, நாட்டின் மிகப்பெரிய நீர் ஆதாரம் மாத்தறை மாவட்டம் பிட்டபெத்தரபொலிஸ் நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போதே இந்த அபூர்வ ஊற்று கண்டறியப்பட்டது.…

சர்வமத இஃப்தார் நிகழ்வு..!

வெல்லம்பிட்டிய நவரத்ன ஜயவீர மாவத்தையில் அமைந்துள்ள அல் மத்ரஸதுல் உம்மா ஜஸீமா நாஸீம் ஜும்மா பள்ளிவாசல் மற்றும் K.J.M. பாடசாலை ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த விசேட இஃப்தார் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கொலன்னாவ தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களின் பிரதான மௌலவிமார்களின்…

அஸ்வெசும திட்டத் தரவுப் புதுப்பிப்பு..!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்தவர்களின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது நாடு முழுவதும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நலன்புரி நன்மைகள் சபையின் விதிமுறைப்படி, பயனாளிகளின் பெயர் பட்டியலை ஆண்டுதோறும் புதுப்பிப்பது கட்டாயமாகும்.இதுவரை 29…

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உறுதி!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் புதிய திட்டங்களை வகுத்துள்ளது. மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது ஆகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு கையிருப்பில்…